பூட்டப்பட்டிருக்கும் வீட்டுக்குள் புகுந்த இராணுவத்திற்கு காத்திருந்த அதிா்ச்சி..! பெருமளவு ஆவணங்கள் மீட்பு.

ஆசிரியர் - Editor I
பூட்டப்பட்டிருக்கும் வீட்டுக்குள் புகுந்த இராணுவத்திற்கு காத்திருந்த அதிா்ச்சி..! பெருமளவு ஆவணங்கள் மீட்பு.

மன்னாா்- வவுனியா வீதியில் சாளம்பைகுளம் பகுதியில் உள்ள பூட்டப்பட்ட வீடொன்றுக்குள் சோதனைக்காக புகுந்த இராணுவத்தினா் 15 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பல ஆவணங்களை மீட்டிருக்கின்றனா். 

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சாளம்பைக்குளம் பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது பூட்டியிருந்த வீட்டிலிருந்து அச்சுப்பிரதி செய்து 

லெமிலன்ட் செய்யப்பட்ட பதினைந்து அடையாள அட்டைகள் மற்றும் சில ஆவணங்களை மீட்டெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள்

பூவரசங்குளம் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.  எனினும் இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு