கொழும்பு கோட்டை பகுதியில் பதற்றம்..!

ஆசிரியர் - Editor I
கொழும்பு கோட்டை பகுதியில் பதற்றம்..!

கொழும்பு- கோட்டையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியாா் பேருந்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொதி ஒன்று வைக்கப்பட்ட சம்பவம் தொடா்பில் பொலிஸாா் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனா். 

தனியார் பேருந்தொன்றில் இருந்து இன்று காலை சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்படி பொதியை சோதனையிட்டதில் , பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் குறித்த பொதி அங்கு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதேவேளை, இதனால், அப்பகுதியில் சற்று பதற்ற நிலை நிலவியுள்ளன.

அத்துடன் பாதுகாப்பின்றி வீதியில் பேருந்தை நிறுத்தி விட்டு சென்றமையால் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் உள்ள விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கமரா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு