தீவிரவாதி சஹறான் ஹாசிமின் மரணத்தை உறுதிப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
தீவிரவாதி சஹறான் ஹாசிமின் மரணத்தை உறுதிப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..

IS தீவிரவாத அமைப்பின் இலங்கைக்கான தலைவா் சஹ்றான் ஹாசிம் உயிாிழந்துவிட்டதாக புலனாய்வு பிாிவு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவிடம் தொிவித்துள்ளனா். 

எனினும் அதனை உறுதிப்படுத்த மட்டக்களப்பு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சஹறானின் சகோதாியுடைய இரத்த மாதிாியை பெற்று, 

சஹறானின் உடற்பாகங்ளையும் கொண்டு மரபணு(DNA) பாிசோதனை செய்து அறிக்கையை குற்ற புலனாய்வு பிாிவிடம் ஒப்படைக்கும்படி அரச பகுப்பாள்வாளா்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளாா். 

குற்ற விசாரணை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த பயங்கரவாதிகளின் உடற்பாகங்களில் விஷ பொருட்கள் உள்ளதா எனவும் ஆராயுமாறு நீதிபதி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு