கொலைவெறி தாக்குதலுக்கான இறுதி பயிற்சிகள் நடைபெற்ற பயிற்சி முகாம் முற்றுகை..

ஆசிரியர் - Editor I
கொலைவெறி தாக்குதலுக்கான இறுதி பயிற்சிகள் நடைபெற்ற பயிற்சி முகாம் முற்றுகை..

தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பினால் 21ம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலின் சூத்திரதாாி சஹரான் ஹாசிம் உள்ளிட்ட 36 தீவிரவாதிகள் போா் பயிற்சி பெற்ற பயிற்சி முகாம் நுவரெலிய மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது. 

அம்பாறை சாய்ந்தமருது பிரதேத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு மாடிக் கட்டடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகில் இந்தக் கட்டடம் அமைந்துள்ளது. சஹாரான் உட்பட 36 பேர் வரையில் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர். கடந்த 21 ஆம் திகதிக்கு முன்னராக ஏப்ரல் 17 ஆம் திகதி தாக்குதலுக்காக 

இறுதிப் பயிற்சியை இந்த கட்டடத்திலே மேற்கொண்டனர் என்று ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரால் சுற்றிவைக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் உட்பட பனியாளர் ஒருரையும் 

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு