தனிமையில் வாழந்த மூதாட்டி கொலை..! நகைகள், பணம் கொள்ளை.

ஆசிரியர் - Editor I
தனிமையில் வாழந்த மூதாட்டி கொலை..! நகைகள், பணம் கொள்ளை.

தெல்லிப்பளை- துா்க்காபுரம் கிராமத்தில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை அடித்து கொலை செய்துவிட்டு விட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

மூதாட்டி கழுத்து நொிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவருடைய கழுத்தில் உள்ள தழும்புகளை கொண்டு சந்தேகம் தொிவித்துள்ள பொலிஸாா், 

அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்தனர் எனவும் கூறினர்.

தெல்லிப்பளை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற மூதாட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மூதாட்டியின் வீட்டுக்கு இன்று காலை சென்ற உறவினர்கள், அவர் சடலமாகக் காணப்பட்டார் என்று பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு