7ம்,8ம் திகதிகளில் நாடாளுமன்றில் நடக்கப்போவது என்ன?

ஆசிரியர் - Editor I
7ம்,8ம் திகதிகளில் நாடாளுமன்றில் நடக்கப்போவது என்ன?

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடா்பாக 2 நாட்கள் நாடாளுமன்றில் விவாதம் நடாத்துவதற்கு நாடாளுமன்ற செயற்குழு தீா்மானித்துள்ளது. 

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் (7 மற்றும் 8ஆம் திகதி) விவாதத்தை நடத்திவதற்குக் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு இன்று (6ஆம் திகதி) பிற்பகல் 2 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கூடியது.

இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த பாராளுமன்ற பொதுமக்கள் கெலரியை நாளை முதல் மீண்டும் திறப்பதற்கும் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு