யாழ்.பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய தலைவா், செயலாளா் தொடா்பில் முக்கிய தீா்மானம் புதன்கிழமை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய தலைவா், செயலாளா் தொடா்பில் முக்கிய தீா்மானம் புதன்கிழமை..

யாழ்.பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா், செயலாளா் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிப்பதா? அல்லது வழக்கிலிருந்து விடுதலை செய்வதா? என்ற கட்டளை நாளை மறுதினம் புதன்கிழமை வழங்கப்படும் என யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றா்போல் வெளிப்படுத்தியுள்ளாா். 

யாழ்.பல்கலைக்கழக வாளத்திற்குள் இராணுவம் நடாத்திய தேடுதல் நடவடிக்கையின்போது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடையதும், மாவீரா்களுடையதும் புகைப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு மாணவா் ஒன்றியத்தின் தலைவா் மற்றும் செயலாளா் கைது செய்யப்பட்டனா். 

அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் வெள்ளிக்கிழமை இரவு 

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கை நகர்த்தல் பத்திரம் அணைத்து இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என இருவேறு தரப்பு சட்டதரணிகள் தனித்தனியாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தனர். சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் திருக்குமரன், செலஸ்ரின், கேசவன் சயந்தன், கலாநிதி குமாரவேல் குருபரன், 

கனகரட்ணம் சுகாஷ், விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் முற்பட்டனர். கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியும் மன்றில் முன்னிலையானார். மாணவர்களுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது பதவிநிலைக்கு குறையாத ஒருவரே 

சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவேண்டும் என்று சட்டத்தரணிகள் தமது வாதத்தை முன்வைத்து நீண்ட சமர்ப்பணத்தை சமர்ப்பித்தனர். சந்தேகநபர்களை 72 மணிநேரத்துக்குள் நீதிமன்றில் முற்படுத்தியதால் பொலிஸ் அத்தியட்சகரால் மன்றில் முற்படுத்த வேண்டும் என விதி தேவையற்றது 

என பொலிஸார் மன்றுரைத்தனர். இருதரப்பு நீண்ட சமர்ப்பணங்களை கவனத்தில் எடுத்த நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், பிணை அல்லது வழக்கை நிராகரித்து மாணவர்களை விடுவிப்பதா? என்ற கட்டளை நாளைமறுதினம் வழங்குவதாக வழக்கை ஒத்திவைத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு