மட்டக்களப்புக்குள் வெடிபொருட்களுடன் புகுந்த லொறி..! பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.

ஆசிரியர் - Editor I
மட்டக்களப்புக்குள் வெடிபொருட்களுடன் புகுந்த லொறி..! பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாாிய தாக்குதல் ஒன்றை நடாத்தும் திட்டத்துடன் வெடிபொருட்களுடன் லொறி ஒன்று நுழைந்ததாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், பாடசாலைகள், மத தலங்கள், பொது இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த தகவலை கொழும்பை தளமாக கொண்டியங்கும் இணைய ஊடகங்கள் வெளிபப்படுத்தியிருக்கின்றன. இதன்படி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட லொறி ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்,

பாதுகாப்பு தரப்பினா் பாாிய தேடுதல் வேட்டை ஒன்றினை ஆரம்பித்திருக்கின்றனா். இதன்படி நாளை மறுதினம் திங்கள் கிழமை இந்த தாக்குதல் நடாத்தப்படலாம் என கிடைத்துள்ள தகவலின் பிரகாரம் கடுமையான தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ள படையினா், 

மத தலங்கள், பாடசாலைகள், பொது இடங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக மேலும் தொியவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு