இன்றும் நாளையும் அவகாசம்..! ஆயுதங்கள், இராணுவ சீருடைகள் இருந்தால் பொலிஸ் நிலையத்தில் கொடுத்துவிடுங்கள்..

ஆசிரியர் - Editor I
இன்றும் நாளையும் அவகாசம்..! ஆயுதங்கள், இராணுவ சீருடைகள் இருந்தால் பொலிஸ் நிலையத்தில் கொடுத்துவிடுங்கள்..

கூாிய ஆயுதங்கள், வாள்கள் மற்றும் உயிா் ஆபத்தை உண்டாக்கும் ஆயுதங்கள், இராணுவ சீருடைகள் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இன்று அல்லது நாளை ஒப்படைத்துவிடுங்கள் என பொலிஸாா் பொதுமக்களிடம் பகிரங்க கோாிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனா். 

நாடுமுழுவதும் தற்போது முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புத் தேடுதலில் போது வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள் என்பன கைப்பற்றப்படுகின்றன.

அவற்றை வைத்திருப்போர் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்துவைக்கப்படுகின்றனர்.

இதனால் அவற்றையில் உடமையில் வைத்திருப்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதன் மூலம் மேற்படி குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவர் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு