பதுங்கியிருந்த தீவிரவாதிகளை காட்டிக் கொடுத்த 3 முஸ்லிம்களுக்கு அடித்த அதிஸ்ட்டம்..!

ஆசிரியர் - Editor I
பதுங்கியிருந்த தீவிரவாதிகளை காட்டிக் கொடுத்த 3 முஸ்லிம்களுக்கு அடித்த அதிஸ்ட்டம்..!

கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் வீடொன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வழங்கிய 3 முஸ்லிம் நபா்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் பணப்பாிசில் வழங்க பொலிஸ் தலமையகம் தீா்மானித்துள்ளது. 

அதேபோல் , குறித்த சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட மூன்று காவற்துறை அதிகாரிகளுக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமையன்று மேற்படி மூன்று நபர்களும் வழங்கிய தகவலின் பேரில் காவற்துறையினர் , மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து குறித்த வீட்டினை சுற்றிவளைத்த போது வீட்டில் தங்கியிருந்த பயங்கரவாதிகள் மூன்று குண்டினை வெடிக்கச் செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்தது. இந்த குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதலில் 15 பேர் பலியாகியிருந்தனர். அதில் 6 பயங்கரவாதிகளும் அடங்குவர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு