வவுனியா நகரசபை வளாகத்திற்குள் வெடிமருந்து மற்றும் 3 அடையாள அட்டைகள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
வவுனியா நகரசபை வளாகத்திற்குள் வெடிமருந்து மற்றும் 3 அடையாள அட்டைகள் மீட்பு..!

வவுனியா நகரசபை வளாகத்திற்குள் இருந்து பாறைகளை உடைப்பதற்கு பயன்படுத்தும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

நகரசபை வளாகத்தில் பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கபட்டிருந்த குப்பை அகற்றும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்காக நகரசபை உத்தியோகத்தர்கள் சுத்தபடுத்தினர்

இதன்போது கல் உடைப்பதற்கு பயன்படும் வெடிமருந்து சிறிதளவில் காணப்பட்டதுடன், மூன்று பேரின் தேசிய அடையாள அட்டைகளும் அதனுள் இருந்துள்ளன.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், வெடிமருந்து மற்றும் அடையாள அட்டைகளை மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு