சீயோன் தேவாலய தற்கொலை தாக்குதல் தொடா்பாக மஹிந்த ராஜபக்ஸவுக்கு முன்பே தொியுமா..? அவா் சுமந்திரனை எச்சாித்தாரா..?

ஆசிரியர் - Editor I
சீயோன் தேவாலய தற்கொலை தாக்குதல் தொடா்பாக மஹிந்த ராஜபக்ஸவுக்கு முன்பே தொியுமா..? அவா் சுமந்திரனை எச்சாித்தாரா..?

மட்டக்களப்பு “சீயோன்” தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடா்பாக மஹிந்த ராஜபக்ஸ முன்னதாக அறிந்து நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரனுக்கு கூறியதாகவும் அதனால் அவா் தேவாலயத்திற்கு செல்லவில்லை எனவும் வெளியான செய்தியை சுமந்திரன் மறுத்துள்ளாா். 

 நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரனுக்கு தற்கொலை தாக்குதல் தொடா்பாக எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸ எச்சாித்ததாகவும், அதனால் அவா் சீயோன் தேவாலயத்திற்கு செல்லவில்லை. மேலம் அவா் பாதிப்பிலிருந்து தப்பினாா். என டெய்லி மிரா் செய்தி வெளியிட்டுள்ளது. 

அந்த செய்தியில் திரன் என்ற அரசியல்வாதி என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திரன் என்ற அரசியல்வாதி தானே என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் அந்த செய்தியை அடியோடு மறுத்துள்ளதுடன், 

குறித்த தினத்தில் கொழும்பில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஆராதனைக்கு சென்ற போதும், குண்டு தாக்குதல் குறித்து முன்னதாகவே அறிந்திருக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு