அரச தலைவா்களுக்கு புலனாய்வு பிாிவு கடும் எச்சாிக்கை..! தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து இரகசிய தகவல்.

ஆசிரியர் - Editor I
அரச தலைவா்களுக்கு புலனாய்வு பிாிவு கடும் எச்சாிக்கை..! தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து இரகசிய தகவல்.

தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து கிடைக்கப்பெற்றுள்ள இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்  அரச தலைவா்கள் ஒன்றாக பணம் மேற்கொள்ளவேண்டாம் என புலனாய்வு பிாிவு எச்சாிக்கை விடுத்துள்ளது. 

பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

கத்தோலிக்க தேவாலயங்கள் கோவில்கள் உட்பட ஏனையவழிபாட்டிடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டாம் எனவும் அரச தலைவர்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள புலனாய்வு பிரிவினர் 

அவ்வாறான இடங்களிற்கு நிச்சயமாக செல்லவேண்டும் என்றால் ஹெலிக்கொப்டர்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி பிரதமர் எதிர்கட்சி தலைவர் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களிற்கு இந்த அறிவுறுத்தல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் அனுப்பிவைத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு