வல்வெட்டித்துறை-கம்பர்மலையில் மோதல், 8 பேர் காயம்.

ஆசிரியர் - Editor I
வல்வெட்டித்துறை-கம்பர்மலையில் மோதல், 8 பேர் காயம்.

வல்வெட்டித்துறை- கம்பர் மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

"வடமராட்சி கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் இரண்டு தரப்புகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது. அது மைகலப்பாக மாறியதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் ஊரணி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றும் பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு