யாழ்.குடாநாட்டில் மத முரண்பாட்டை உருவாக்க சதி..! செம்மணியில் வைக்கப்பட்ட கிறிஸ்த்தவ மத பதாகை கிழித்தெறியப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் மத முரண்பாட்டை உருவாக்க சதி..! செம்மணியில் வைக்கப்பட்ட கிறிஸ்த்தவ மத பதாகை கிழித்தெறியப்பட்டது..

யாழ்.செம்மணி வீதியில் கிறிஸ்தவ   (சபை)  மதத்தினை சார்ந்தவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள் இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. 

செம்மணி பகுதியில் உள்ள யாழ்.வளைவுக்கு அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டது. அதனை  செம்மணி ஈஸ்வரர் என அழைத்தனர். 

அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சிவலிங்கம் வைக்கப்பட்டு உள்ள இடத்திற்கு அருகிலும் , சற்று தொலைவிலுமாக கிறித்தவ சபை ஒன்றினை சார்ந்தவர்கள் என நம்பப்படும் சிலரால் பதாகைகள் வைக்கபட்டன. 

அதனை அவதானித்த இந்து மதத்தை சேர்ந்த சிலர் பதாகை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை நாட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அவ்விடத்தில் பதட்டம் ஏற்பட்டது. 

அதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இரு தரப்பினரையும் சமாதான படுத்தி அனுப்பி வைத்தனர். 

அந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள் சேதமாக்கப்பட்டு உள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு