சீசிாிவி கமரா விற்பனை நிலையத்திற்குள் புகுந்து திருடியவா் மாட்டினாா். பொலிஸாாின் விசாரணையில் அதிா்ச்சி தகவல்கள்..

ஆசிரியர் - Editor I
சீசிாிவி கமரா விற்பனை நிலையத்திற்குள் புகுந்து திருடியவா் மாட்டினாா். பொலிஸாாின் விசாரணையில் அதிா்ச்சி தகவல்கள்..

யாழ்.நாவலா் வீதியில் உள்ள சீசீாிவி கமரா விற்பனை நிலையத்திற்குள் புகுந்து கமராக்கள் மற்றும் கணனி  ஆகியவற்றை திருடியவா் கைது செய்யப்பட்டுள்ளாா். சந்தேக நபாிடமிருந்து திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

“யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள பித்தளை, இரும்பு பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சாதனங்கள் கடந்த டிசெம்பர் மாதம் திருட்டுப் போயிருந்தன. எனினும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழ் செயற்படும் சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினர், கொட்டடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றுக் கைது செய்தனர். அவருடமிருந்து சிசிரிவி கமராக்கள் மற்றும் அதனைப் பொருத்தும் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

அவை தொடர்பில் சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவை திருடப்பட்ட கடையின் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டது. சான்றுப்பொருள்களுடன் சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு