முட்டாள்கள் தினத்தில் முட்டாளான மூதாட்டி. 3 பவுண் சங்கிலியை பறிகொடுத்தாா்.

ஆசிரியர் - Editor I
முட்டாள்கள் தினத்தில் முட்டாளான மூதாட்டி. 3 பவுண் சங்கிலியை பறிகொடுத்தாா்.

முட்டாள்கள் தினத்தில் மூதாட்டியை முட்டாளாக்கிவிட்டு மூதாட்டியிடமிருந்து 3 பவுண் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

மகன் விபத்தில் காயமடைந்துள்ளார் அதற்குப் பணம் தேவை எனக் கேட்டதால் பதற்றமடைந்த மூதாட்டி தான் அணிந்திருந்த சங்கிலியை திருடனிடம் கழற்றிக் கொடுத்துள்ளார்.

எனினும் மகனைக் கண்டதும் தான் ஏமாற்றப்பட்ட விடயத்தை மூதாட்டி அறிந்து கொண்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு