தமிழீழ வைப்பகம் அமைந்திருந்த இடத்தை தோண்டும் பொலிஸாா். வழக்கம்போல் பழந்துணிகளை மீட்பாா்கள்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ வைப்பகம் அமைந்திருந்த இடத்தை தோண்டும் பொலிஸாா். வழக்கம்போல் பழந்துணிகளை மீட்பாா்கள்..

தமிழீழ விடுதலை புலிகளின் தங்க நகைகளை தேடி இன்று முல்லைத்தீவு பகுதியில் பொலிஸா் அகழ்வு பணிகளை ஆரம்பித்திருக்கின்றனா். 

விடுதலைப் புலிகளின் ‘ஈழம் வங்கி’ குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்துள்ளதுடன், இறுதி யுத்தத்தின் போது, வங்கியிலிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், 

வங்கி அமைந்திருந்த இடத்தில் புதைக்கப்பட்டதாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் காவற்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

தற்போது முல்லைத்தீவு கூட்டுறவு திணைக்களத்துக்கு உரித்துடைய குறித்த இடத்தில், காவற்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகழ்வுப் பணிகளில், முல்லைத்தீவு பகுதி இராணுவ அதிகாரிகள், காவற்துறை அதிரடிப் படையினர், மற்றும் பல பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு