பட்டதாாிகளுக்கு வேலை இல்லையெனில் பல்கலைக்கழகங்களை இழுத்து மூடு..! பட்டதாாிகள் போராட்டம்.

ஆசிரியர் - Editor I
பட்டதாாிகளுக்கு வேலை இல்லையெனில் பல்கலைக்கழகங்களை இழுத்து மூடு..! பட்டதாாிகள் போராட்டம்.

வடமாகாண வேலையற்ற பட்டதாாிகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனா். 

 “வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்காமை , 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி ஒதுக்கப்படாமை“ ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“30 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடம் இருந்தும் பட்டதாரிகளுக்கு நியமனம் எங்கே”,பட்ட படிப்புக்கு வேலை இல்லை எனில் பல்கலைக் கழகத்தை இழுத்து மூடு ,தொழிலுரிமை கிடையதாம் இதுவா நல்லாட்சி ” போன்ற வாசங்கங்களை ஏந்தியவாறு பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு