யாழ்.தீவகம் வேலணையில் தொடரும் கொள்ளை, கண்டு கொள்வாா் யாருமில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவகம் வேலணையில் தொடரும் கொள்ளை, கண்டு கொள்வாா் யாருமில்லை..

யாழ்.வேலணை பகுதியில் மீண்டும் மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படும் சம்பவங்கள் அதிகாித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். 

பல்வேறு தேவைகளுக்காக தீவகத்துக்கு வருபவர்கள் மாடுகளை களவாடிச் செல்கின்றனர்.தாம் வரும் கனரக வாகனங்களில் அவற்றை கொண்டு செல்கின்றனர். 

இவை தவிர மாடுகள் களவாடப்பட்டு இறைச்சி ஆக்கப்பட்டு அதன் தோல் ,எலும்புகள் பொது இடங்கள் , பற்றைகளில் வீசப்படுகின்றன.

மாடுகள் களவாடப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டாலும் அவர்கள் சில நாள் கள் விசாரணை செய்து விட்டு அப்படியே விட்டு விடுவார்கள் என்று மக்கள் குறை கூறுகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு