சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயற்சித்த 11 போ் கைது, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சோ்ந்தவா்களாம்..!

ஆசிரியர் - Editor I
சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயற்சித்த 11 போ் கைது, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சோ்ந்தவா்களாம்..!

புத்தளத்திலிருந்து சட்டவிரோதமான பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயற்சித்த 11 போ் கைது செய்யப்பட்டிருக்கி ன்றனா். கைது செய்யப்பட்டவா்களில் 2 சிறுவா்கள் உள்ளடங்குவதாகவும், 11 பேரும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளை சோ்ந்தவா்கள் என கூறப்படுகிறது. 

புத்தளம் பொலிஸார் நேற்றிரவு முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 11 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்கள் பயணித்த வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெற்றவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு