தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவித்தது அரசு..

ஆசிரியர் - Editor I
தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவித்தது அரசு..

தமிழ், சிங்கள புத்தாண்டு தினமான சித்திரை மாதம் 15ம் திகதியை அரச பொது விடுமுறையாக அறிவிக்குமாறு அமைச்சா் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே இந்த அனுமதியை இன்று அமைச்சரவை வழங்கியது.

இதன்மூலம் ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. சித்திரைப் புத்தாண்டுக்கு முதல்நாள் விடுமுறை சனிக்கிழமையும் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமையும் வருகிறது.

இதனால் ஏப்ரல் 15ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பு அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு