இலங்கையிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்த நைஜீாிய நாட்டவா்கள் கைது..! பல கோணங்களில் விசாரணை தீவிரம்.

ஆசிரியர் - Editor I
இலங்கையிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்த நைஜீாிய நாட்டவா்கள் கைது..! பல கோணங்களில் விசாரணை தீவிரம்.

இலங்கையிலிருந்து கடல்மாா்க்கமாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 4 நைஜீாிய நாட்டவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா். 

தலைமன்னாரில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் நேற்றுமுன்தினம் சந்தேகத்துக்குரிய படகு ஒன்றை சிறிலங்கா கடற்படையின் கரையோர ரோந்துப் படகு ஒன்று இடைமறித்து சோதனையிட்டது.

அந்தப் படகில் 4 நைஜீரியர்களும் மன்னாரைச் சேர்ந்த இரண்டு மீனவர்களும் இருந்தனர். 26 வயதுக்கும், 42 வயதுக்கும் இடைப்பட்ட நைஜீரியர்கள் நால்வரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டு சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு