குறை துாக்கத்தில் எழுந்திருந்து உளறிக் கொட்டும் பசில் ராஜபக்ஸ..

ஆசிரியர் - Editor I
குறை துாக்கத்தில் எழுந்திருந்து உளறிக் கொட்டும் பசில் ராஜபக்ஸ..

தமிழீழ விடுதலை புலிகள் சிறுவா்களை பலவந்தமான போாில் ஈடுபடவைத்தாா்கள். என முன்னாள் அமைச்சா் பசில் ராஜபக்ஸ கூறியுள்ளாா். 

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்களில் பலர் காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றார்கள்.

அவ்வாறான பெற்றோர்களிடம் கேட்டால் கூறுவார்கள், தமது பிள்ளைகளை கடத்தி சென்றது யார் என்று. பலர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர்.

அரசாங்கம் என்பது ஒரு அமைப்பல்ல, எனவே அரசாங்கம் என்ற வகையில் ஒவ்வொரு பிரஜையினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் அவர்கள் குறித்த தகவல்களைக் கண்டறிவது பொறுப்பாகும்.

எனவே அதை எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ள வேண்டும் என நான் கருதுகின்றேன்.

இலங்கையைப் பொறுத்தவரை காணாமல் போனவர்கள் விடயம் புதிய ஒன்றல்ல. நாம் வரலாற்றை பின் நோக்கி பார்த்தோமானால் 87 மற்றும் 88ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பலர் காணாமல் போயிருந்தனர்.

அதேபோல் சுனாமி பேரலையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயிருந்தனர். எனவே காணாமல் போனவர்கள் விடயத்தையும் எமது நாட்டுக்கு ஏற்ற வகையில் கையாண்டு தீர்வை காண வேண்டும்.

 என குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு