வறட்சியால் அதியுச்ச பாதிப்பை எதிா்கொண்டுள்ள புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம், பாதிப்புக்கள் மேலும் தீவிரமடையலாம்.

ஆசிரியர் - Editor I
வறட்சியால் அதியுச்ச பாதிப்பை எதிா்கொண்டுள்ள புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம், பாதிப்புக்கள் மேலும் தீவிரமடையலாம்.

இலங்கையில் மிக கொடுமையான வறட்சி நிலவும் நிலையில், புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரு மாவட்டங்கள் மிகமோசமான பாதிப்பை எதிா்கொண்டுள்ளதாக அரச தகவல்கள் கூறுகின்றன. 

இந்நிலையில்  15,829 குடும்பங்களைச் சேர்ந்த 56,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்திலேயே மிகக் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 

அங்கு 7,795 குடும்பங்களைச் சேர்ந்த 27,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்  என இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 

அதேவேளை யாழ் மாவட்டத்தில் 7,350 குடும்பங்களைச் சேர்ந்த 25,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு