காபன் பாிசோதனைக்காக அமொிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மனித எலும்பு மாதிாிகள், மன்னாாில் மீட்கப்பட்டவைதானா? கிளம்பும் புதிய சா்ச்சை.

ஆசிரியர் - Editor I
காபன் பாிசோதனைக்காக அமொிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மனித எலும்பு மாதிாிகள், மன்னாாில் மீட்கப்பட்டவைதானா? கிளம்பும் புதிய சா்ச்சை.

மன்னாா்- சதோஷ வளாகத்தில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்பு எச்சங்களின் கால எல்லை தொடா்பான பல விமா்சனங்கள் எழுந்துவரும் நிலையில், காபன் பாிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் தொடா்பில் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். என முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் கேட்டுள்ளாா். 

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது இல்­லத்­தில் நேற்று முந்தினம் நடத்­திய ஊடக சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மன்­னார் புதை­குழி தொடர்­பான முழு­மை­யான அறிக்­கை­க­ளைப் பார்க்­கா­மல் பதில் கூறு­வது எங்­க­ளுக்­குக் கடி­னம். இந்­தி­யா­வி­லி­ருந்து வந்த தடயவியல் ஆராய்ச்­சி­யா­ளர் ஒரு­வர் அந்­தப் பகு­திக்­குச் சென்று அங்கு       மீட்­கப்­பட்ட எலும்­புக் கூடு­க­ளைப் பார்த்து அவை கடந்த 50 வரு­டங்­க­ளிலே நடை­பெற்ற இறப்­புக்­க­ளா­கத்­தான் இருக்க வேண்­டு­மென்று கூறி­யி­ருக்­கின் றார்.

அவர் கூறிய 50 ஆண்­டு­க­ளுக்­கும் ஆய்­வின் பின்­னர் வந்­தி­ருக்­கும் காபன் அறிக்­கை­யின் 500 ஆண்­டு­க­ளுக்­கும் இடை­யில் பல­வி­த­மான வித்­தி­யா­சங்­கள் இருக்­கின்­றன. இங்கு 50 வரு­டங்­கள் என்று ஒரு விட­யத்­தைப் பரிசீலித்துக் கொண்­டி­ருக்­கும் பொழுது,

அமெ­ரிக்­கா­வுக்கு 500 வரு­டங்­க­ளுக்கு முன்­னை­யதை அனுப்­பி­னால் அவர்­கள் 500 வரு­டங்­க­ளாக இருக்கத்தக்கதா­கத் தான் அறிக்­கை­யைத் தரு­வார்­கள் என்­பது ஒன்று. நாங்­கள் ஒரு முக்­கி­ய­மான விட­யத்­தைப் பார்க்க வேண்­டும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு