யாழ்பாண மக்களின் தலையில் மிளகாய் அரைத்த நிதி நிறுவனம், நீங்களும் ஏமாற்றப்பட்டிருக்கலாம், ஏமாற்றப்படலாம் அவதானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்பாண மக்களின் தலையில் மிளகாய் அரைத்த நிதி நிறுவனம், நீங்களும் ஏமாற்றப்பட்டிருக்கலாம், ஏமாற்றப்படலாம் அவதானம்..

இலங்கை மத்திய வங்கியினால் 2013ம் ஆண்டு தடைசெய்யப்பட்ட நிதி நிறுவனம் சாவகச்சோி பகுதியில் இயங்கிவந்த நிலையில் 2017ம் ஆண்டு சாவகச்சோி நீதிமன்றினால் தடைசெய்யப்பட்டது. 

அதன் பின்னா் அதே நிறுவனம் யாழ்.நகாில் நிறுவனத்தை அமைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தை முடக்குவதற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டது. 

பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு.

பிரமிட் வியா­பா­ரத்தை ஒத்த வர்த்­தக நட­வ­டிக்கை ஒன்றை மேற்கொள்ளும் இந்த நிதி நிறு­வ­னம், 2013 ஆம் ஆண்டு மத்­திய வங்கியால் தடைசெய்­யப்­பட்­டது. 

தடை செய்­யப்­பட்ட நிறு­வ­னம் சிறிது காலத்­தில் யாழ்ப்­பா­ணம் தென்மராட்சிப் பகு­தி­யில் அதன் கிளை நிறு­வ­னம் ஒன்றை  ஆரம்பித்திருந்­தது. 

அந்த நிறு­வ­னத்­துக்கு எதி­ ராக சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் தாக்­கல் செய்த வழக்­கின் அடிப்­ப­டை­யில் 2017 ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 26 ஆம் திகதி நீதி­பதி சிறி­நிதி நந்­த­சே­க­ரன் நிறு­வ­னம் இயங்­கு­வ­தற்கு தடை விதித்­தி­ருந்­தார்.

தடை விதிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, சாவ­கச்­சே­ரி­யில் இயங்­கிய கிளை மூடப்­பட்­டது. இந்த நிலை­யில் அதே நிறு­வ­னம் தற்­போது யாழ். நக­ரில் தனது கிளையை ஆரம்­பித்­துள்­ளது. 

இத­னால் இந்­தக் கிளையை மூட வேண்­டும் என பொலிஸ்மா அதி­ப­ரின் கவ­னத்­துக்கு மின் அஞ்­சல் மூலம் தகவல் கொண்டு செல்­லப்­பட்­டது. பொலிஸ்மா அதி­ப­ரின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்ட மின் அஞ்­சல் நேற்று முன்­தி­னம் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந்த முறைப்­பாட்­டா ளரை அழைத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் பொது மக்­கள் நன்மை கருதி முறைப்­பாட்டை பதிவு செய்து ஏமாற்று மோசடி வழக்­காக பதிவு செய்ய ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டார். மத்­திய வங்­கி­யால் தடை செய்­யப்­பட்ட விவ­ரம், சாவ­கச்­சேரி நீதி­மன்­றால் தடை செய்­யப்­பட்ட விவ­ரங்­க­ளின் பிர­தி­க­ளை­யும் பெற்­றுக்­கொண்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த விட­யம் தொடர்­பில் முறைப்­பாட்­டா­ள­ரைத் தொடர்பு கொண்டு கேட்­ட­போது: நீதி­பதி சிறி­நிதி நந்­த­சே­க­ரன் நீதி­வான் அன்றி அவர் ஓர் நீதி­ப­தி­யா­வார். அவ­ரது உத்­த­ரவு மாவட்­டம் முழு­மை­யாக செல்­லு­ப­டி­யா­ன­தா­கவே கருத முடி­யும். 

அதனை உறுதி செய்­ய­வும் இவ்­வா­றான மோச­டியை தடுக்­கும் வகை­யி­லும் இந்த முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது என்று தெரிவித்த முறைப் ­பாட்டா­ளர், நிறு­வ­னத்­துக்கு எதி­ராக விதிக்­கப்­பட்ட தடை உத்­த­ர­வு­கள் தொடர்­பான ஆதா­ரங்­க­ளும் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் தெரி­வித்­தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு