வடமராட்சி கிழக்கு மக்கள் மத்தியில் பதற்றம், கைால்கள், கைகளை கட்டி சிறுவனை துாக்கிலிட முயற்சி..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கிழக்கு மக்கள் மத்தியில் பதற்றம், கைால்கள், கைகளை கட்டி சிறுவனை துாக்கிலிட முயற்சி..

இனம் தெரியாத கும்பல் ஒன்று மேற்க்கொண்ட முயற்சி, சிறுவன் அதிஷ்டவசமாக தப்பித்துள்ளான். இச் சம்பவம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 6:45 மணியளவில் சிறுவன் ஒருவனை கொலை செய்யும் முயற்சி இடம் பெற்றுள்ளது. 

எனினும் தெய்வாதீனமாக சிறுவன் காப்பாற்றப் பட்டுள்ளான்.  இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.கடந்த 29/03/2019 வெள்ளிக் கிழமை குறித்த சிறுவனது குடும்பம் 

கட்டைக்காடு தேவாலயத்திற்க்கு 4:00 மணியளவில் சென்று 6:45 மணியளவில் வழிபாடுகள் நிறைவு செய்துவிட்டு  குறித்த சிறுவனை தவிர அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.

சிறுவன்  தேவாலயத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு  15 நிமிடம் தாமதித்து வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தேவாலயத்தில் நின்றதாகவும் பின்னர் குறித்த சிறுவன் 

15 நிமிடம் கழித்து தமது வீட்டிற்கு வராமையால் வழமையாக பிற்பகல் வேளை சிறுவனது அம்மம்மா வீட்டில் படம் பார்ப்பதாகவும், சில வேளை அங்கே இருக்கலாம் என்று அங்கு சிறுவனது பெற்றோர் சென்றபோது 

சிறுவனது கை மற்றும் கால் கட்டப்பட்டு கழுத்தை சுற்றியும் துணியால் மிக இறுக்கமாக சுற்றப்பட்டு வாயிற்க்குள்ளும் துணிகள் திணிக்கப்பட்டு சுய நினைவின்றி வீட்டின் பின் பகுதியில் காணப்பட்டுள்ளான். 

உடனடியாக சிறுவனை பெற்றோர் மீட்டு 1990 ஆம்புலன்ஸ் சேவை வண்டியில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  நேற்று பிற்பகல் வீடு திரும்பியதாகவும் குறித்த சிறுவனது தாயார் தெரிவித்தார். 

குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவன் கூறியதாவது தான் தேவாலயத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது தனது அம்மம்மா வீட்டிற்க்குள் யாரோ செல்வதை அவதானித்தேன்,  

அவர்களை பின்தொடர்ந்து அங்கு சென்றபோது யாரோ தனக்கு பின்னால் நின்று மூக்கில் ஏதோ துணியால் பொத்தியதாகவும் அதற்கு பின்னர் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் சிறுவன் தெரிவித்தான். 

மேலும்  சிறுவனது அம்மம்மா வீட்டில் சிறுவனை தூக்கில்  போடுவதற்க்காக என சந்தேகிக்கப்படும் வகையில் வீட்டிற்க்குள் கயிறு ஒன்று போடப்பட்டுள்ளதாகவும் தாயர் மேலும் தெரிவித்தார். 

இது தொடர்பாக கிளிநொச்சி மருத்துவமனை பொலிசார் மற்றும் பளை பொலீஸ் கிராம சேவகர் ஆகியோருக்கு   முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் இதுவரை யாரும் குறித்த சம்பவம் தொடர்பில் எந்தவித விசாரணைகளையும் மெற் கொள்ளவில்லை என்றும் பெற்றோர் கவலை தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு