ஊா்காவற்றுறை பொலிஸாாின் அதிரடி..! கொழும்பிலிருந்து வந்த கொள்ளை கும்பல் கூண்டோடு கைது..

ஆசிரியர் - Editor I
ஊா்காவற்றுறை பொலிஸாாின் அதிரடி..! கொழும்பிலிருந்து வந்த கொள்ளை கும்பல் கூண்டோடு கைது..

யாழ்.சாட்டி தேவாலயத்தின் திருவிழாவில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டிரு ந்த 3 பெண்கள் உட்பட 5 திருடா்களை ஊா்காவற்றுறை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

சாட்டியில் உள்ள தேவாலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம் பெற்ற திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தார். 

அதன் போது பக்தர்கள் மத்தியில் ஊடுருவிய திருடர்கள் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டனர். அவர்களால் மூன்று சங்கிலிகள் அறுக்கப்பட்டன. சங்கிலியை பறி கொடுத்தவர்கள் அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிசாரிடம் முறையிட்டனர். 

அதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பொலிசார் தேவாலயத்திற்கு அருகில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஹயஸ் ரக வாகனத்தை மறித்து அதனுள் இருந்தவர்களை சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து இரண்டு சங்கிலிகள் மீட்கப்பட்டன. 

குறித்த இரு சங்கிலியும் தேவாலயத்தில் பக்தர்களிடமிருந்து அறுக்கப்பட்ட சங்கிலி என்பதனை பொலிசார் அடையாளம் கண்டு கொண்டதனை அடுத்து வாகனத்தில் இருந்த மூன்று பெண்கள் உட்பட ஐவரை பொலிசார் கைது செய்தனர். 

அத்துடன் அவர்கள் பயணித்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த சந்தேக நபர்கள் ஐவரும் நீர் கொழும்பு பகுதியை சேர்த்தவர்கள் என விசாரணைகள் மூலம் அறிந்து கொண்டதாக பொலிசார் தெரிவித் தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு