வீட்டுக்குள் புகுந்து தந்தை,மகன் மீது வாள்வெட்டு, நவாலியில் ஆவா குழு அடாவடி..

ஆசிரியர் - Editor I
வீட்டுக்குள் புகுந்து தந்தை,மகன் மீது வாள்வெட்டு, நவாலியில் ஆவா குழு அடாவடி..

நவாலி- அரசடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு நுழைந்த வாள்வெட்டு குழு தந்தை மீதும், மகன் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கி விட்டுத் தப்பி சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் இன்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது. தாக்குதலில் படுகாயமடைந்த தந்தையும் மகனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆவா குழுவில் முன்னர் இருந்த கிருஷ்ணா என்ற இளைஞருடைய வீட்டிக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே தாக்குதலை நடத்தியதாகவும் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு