யாழ்.மட்டுவில் பகுதியில் கோர விபத்து, ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மட்டுவில் பகுதியில் கோர விபத்து, ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்..

புத்தூர் - மட்டுவில் இடையில் டிப்பர் வாகனத்தின் ரயர்கள் வெடித்தமையால் தடம்புரண்ட டிப்பர் வீதியில் சென்று கொண்டிருந்த லான்ட் மாஸ்ட்டருடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை மட்டுவில் புதர்தூர் சாலையில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தை அண்டிய ஆயத்தடியில் இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனத்தின் ரயர் வெடித்ததில் முன்னால் சென்ற இரு சக்கர உழவு இயந்திரத்துடன் மோதியுள்ளது. இதனால் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன் டிப்பர் வாகனமும் தடம்புரண்டது.

லான்ட் மாஸ்டர் வாகனத்தின் சாராதியே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இருவர் இந்த விபத்தில் உயிரிந்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு