நீதிமன்றம் சென்றால் எனக்கு கலியாணம் நடக்காது, நான் நீதிமன்றம் போகமாட்டேன். மாநகரசபைக்கு வந்த சோதனை..

ஆசிரியர் - Editor I
நீதிமன்றம் சென்றால் எனக்கு கலியாணம் நடக்காது, நான் நீதிமன்றம் போகமாட்டேன். மாநகரசபைக்கு வந்த சோதனை..

சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் தனக்கு தி ருமணம் நடக்காது என கூறும் தொழிநுட்ப அலுவலா் ஒருவாினால் யாழ். மாநகரசபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டிடங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக கூறப்படுகின்றது. 

முறைகேடாகக் கட்டப்படும் கட்டடங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வ ழக்குகளைத் தாக்கல் செய்வது தனது திருமணத்தைப் பாதிக்கும் என்று குறித்த தொழில்நுட்ப அலுவலர் கூறுவதால் சட்டத்துக்கு மாறான கட்ட டங்களை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை 

என்று யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர். யாழ்ப்­ பாண நக­ரில் ஒரு வீதி­யைக் காண­வில்லை என்­கிற விவ­கா­ரத்தை மாந­கரசபை உறுப்­பி­னர் ந.லோக­த­யா­ளன் சபை­யில் முன்­வைத்­த­போது எழு ந்த விவா­தத்­தி­லேயே முறை­கே­டான கட்­டடங்­களை 

அகற்­று­வ­தற்­கும் கட்­டு­ப­டுத்­து­வ­தற்­கும் உள்ள இந்த விநோ­த­மான தடை பற்­றிய உள்­வீட்டு விட­யங்­கள் அம்­ப­லத்துக்கு வந்­தன. ‘‘நக­ரின் மத்­தி­யில் காங்­கே­சன்­துறை வீதி­யில் இருந்து ஜூம்மா பள்­ளி­வா­சல் வீதிக்­குச் செல்­லும் இணைப்பு வீதியை இப்­போது காண­வில்லை. 

மின்­சார நிலைய வீதி­யில் உள்ள வர்த்­தக நிலை­யம் ஒன்று அந்த வீதியை ஆக்­கி­ர­மித்து வைத்­துள்­ளது. மாந­கர சபைக்­கு­ரிய அந்த வீதியை மீட்க ஏன் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை?’’ என்­றார் உறுப்­பி­ னர். இதை­ய­டுத்து நக­ரத்­துக்­குள் சட்­டத்­துக்­குப் புறம்­பாக 

எழுப்­பப்­ப­டும் கட்­டு­மா­னங்­கள் தொடர்­பில் வாதப் பிர­தி­வா­தங்­கள் எழுந்­தன.

சபைக்­கு­ரிய ஆவ­ணம் எங்கே?
யாழ்ப்­பாண மாந­கர சபை எல்­லைப் பரப்­புக்­குள் 500க்கும் மேற்­பட்ட முறை­கே­டான கட்­ட­டங்­கள் அமைக்­கப்­ப­டும் நிலை­யில், வெறும் 40 கட்­ ட­டங்­கள் தொடர்­பில்­தான் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது என்­ப­ தும் அங்கு சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. 

பொது மக்­க­ளுக்கு எதி­ராக மட்­டும் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­டு­கின்­றதே தவிர, பணம் படைத்­த­வர்­கள் மற்­றும் அதி­கா­ரம் மிக்­க­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது .

முறை­யற்ற கட்­டு­மா­னங்­கள் மீது வழக்­குத் தொடுப்­பது சபை­யின் தொ ழில்­நுட்ப அலு­வ­ல­ரின் பணி, ஆனால், முறை­யற்ற கட்­டு­மா­னங்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அவ­ருக்­குப் பணித்­தா­லும் அவர் நட­வ­டிக்கை எடுக்க முன்­வ­ரு­கி­றார் இல்லை 

என்று இதற்­குப் பதி­ல­ளித்­தார் பொறி­யி­ய­லா­ளர் வர­தன். மேல­தி­கா­ரி­ யான பொறி­யி­ய­லா­ளர் இட்ட பணியை நிறை­வேற்ற மாட்­டேன் எனத் தெரி­விக்­கும் தொழில் நுட்ப அலுவலர் இந்­தச் சபைக்கு தேவை­தானா? என்று உடனே கேள்­வி­யெ­ழுப்­பி­னார் உறுப்­பி­னர் லோக­த­யா­ளன்.

நீதி­மன்று சென்­றால் பெண் கிடைக்­காது!  

இதற்­குப் பதி­ல­ளித்த மாந­கர முதல்வர் ஆனல்ட், ‘‘தொழில்­நுட்ப அலு­வ­ லர் வழக்­குப் போட­மாட்டேன் என்­ப­தற்­கான கார­ணத்தை என்­னி­ட­மும் ஆணை­யா­ள­ரி­ட­மும் கூறி­ய­ போது வியப்­ப­டைந்­தோம்’’ என்­றார். ‘‘தான் திரு­ம­ணம் செய்­யா­த­வர் என­வும் வழக்­குத் தாக்­கல் செய்­தால் 

அடிக்­கடி நீதி­மன்­றம் செல்ல வேண்­டிய நிலமை ஏற்­ப­டும் என்­றும் அவ்­ வாறு நீதி­மன்­றுக்­குச் சென்று வந்­தால் மணம் முடிக்க பெண் கிடைக்­ காது போய்­வி­டும் என்­றும் தொழில்­நுட்ப அலு­வ­லர் தம்­மி­டம் தெரி­வித்­ தார்’’ என்­றார் மாந­கர பிதா.

இத­னை­ய­டுத்து, குறித்த தொழில்­நுட்ப அலு­வ­ல­ருக்கு எதி­ராக நட­வ­ டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்­றும் சபை­யின் சட்­டத்­த­ரணி ஊடாக வழக்­கு­க­ளைத் தாக்­கல் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

சட்­டத்­த­ர­ணி­யும் தவ­றி­ழைக்­கி­றார்!

சபை­யின் சட்­டத்­த­ர­ணியே அனு­மதி பெறாது பருத்­தித்­துறை வீதி­யில் கட்­ட­டம் ஒன்றை எழுப்­பி­வ­ரும்­போது எப்­படி அவர் முறை­கே­டான கட்­ டடங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பார் என்று கேள்வி எழுப்­பி­னார் உறுப்­பி­னர் தே.தனு­ஜன்.

சட்­டத்­த­ரணி மட்­டு­மல் சபை­யின் இரு உறுப்­பி­னர்­க­ளே­கூட முறை­கே­டா­ கத்­தான் கட்­டடங்­களை அமைத்து வரு­கி­றார்­கள் என்­றும் சபை­யில் சுட்­ டிக்­காட்­டப்­பட்­டது. கார­சா­ர­மான இந்த விவா­தங்­க­ ளின் பின்­ன­ரும் இது தொடர்­பில் எது­வித தீர்­மா­னங்­க­ளும் எடுக்­கப்­ப­ட­வில்லை 

என்று உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு