திருக்கேதீஸ்வரம் ஆலய விவகாரம், மத வன்முறையை துாண்டல், மத இழிவுபடுத்தல் குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
திருக்கேதீஸ்வரம் ஆலய விவகாரம், மத வன்முறையை துாண்டல், மத இழிவுபடுத்தல் குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு..

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவை உடைத்து சேதப்ப டுத்திய விவகாரத்தில் வழக்கு பதிவு செய்த பொலிஸாா் வன்முறையா ளா்களை பாதுகாக்கும் வகையில் வழக்கு பதிவு செய்துள்ளமை அம்பல ப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இதன்படி சாதாரண சொத்து அழிவு வழக்காக திருக்கேதீஸ்வரம் ஆலய சூழலில் இடம்பெற்ற சம்பவத்தை பொலிஸாா் சித்தாிக்க முயற்சித்த நி லையில் அது தவறானது மத வன்முறையை துாண்டும், மத தலங்களை இழிவுபடுத்தல் போன்ற குற்றங்களில்

வழக்கு பதியப்படவேண்டும். என சட்டத்தரணிகள் வாதாடிய நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட மன்று அறிக்கையை திருத்தி தாக்கல் செய்யு மாறு பொலிஸாரை பணித்துள்ளது. திருக்­கே­தீச்­சர ஆலய அலங்­கார வ ளைவு, மகா சிவ­ராத்­தி­ரிக்கு முதல் நாள் கத்­தோ­லிக்க மக்­க­ளால் 

அகற்­றப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பான வழக்கு மன்­னார் நீதி­மன்­றில் பதிவு செய்­யப்­பட்­டது. காணொலி ஆதா­ரங்­கள், ஒளிப்­பட ஆதா­ரங்­க­ ளைப் பயன்­ப­டுத்தி சந்­தே­க­ந­பர்­க­ளைக் கைது செய்ய மன்று கடந்த 8ஆம் திகதி பணித்­தி­ருந்­தது. பொலி­ஸார் கைது செய்­ய­வில்லை. 

கடந்த 24ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை விடு­முறை தினத்­தில் அருட்­தந்­ தை­யர் ஒரு­வர் உள்­ளிட்ட 10பேர் பொலி­ஸில் சர­ண­டைந்­த­னர். பதில் நீதி­வான் முன்­னி­லை­யில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். பிணை­யில் விடு­விக்­ கப்­பட்­ட­னர். இந்த நிலை­யில் வழக்கு

மன்­னார் நீதி­மன்­றில் நீதி­பதி சர­வ­ண­ராஜா முன்­னி­லை­யில் நேற்று எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. முறைப்­பாட்­டா­ளர்­க­ளின் சட்­டத்­த­ர­ணி­கள் மன்­றில் தமது வாதங்­களை முன்­வைத்­த­னர். திருக்­கே­தீச்­சர ஆலய அலங்­கார வளைவு உடைக்­கப்­பட்டு, 

நந்­திக் கொடியை காலால் மிதித்த செயல், ஒரு மதத்தை அவ­ம­திப்­ப­து­ போன்­றது. இரண்டு மதங்­க­ளுக்கு இடை­யி­லான பகை­மையை தோற்­று­ விக்­கும் செயல். குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக தகுந்த ஒளிப்­பட, காணொலி ஆதா­ரங்­கள் இருந்­தும் பொலி­ஸார் 

வழக்கு அறிக்­கை­யில் அவற்­றைச் சேர்க்­க­வில்லை. சாதா­ரண சொத்து அழிவு வழக்­குப் போலவே பதிவு செய்­துள்­ள­னர். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ ளுக்கு உரிய நீதி கிடைக்­கும் வகை­யில், வழக்­கில் ஆதா­ர­மாக காணொ லி ஆதா­ரங்­க­ளைக் கொண்டு மத வன்­மு­றையை தூண்­டு­தல், 

மதத் தலங்­களை அழித்­தல், மதங்­களை இழி­வு­ப­டுத்­தல் ஆகிய சட்­டங்­க­ ளின் கீழ் வழக்­குப் பதிவு செய்து, விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­ வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­த­னர். முறைப்­பாட்­டா­ளர்­க­ளின் சட்­ டத்­த­ர­ணி­க­ளின் கோரிக்­கையை ஏற்­றுக் கொண்ட நீதி­மன்­றம், 

உரிய பிரி­வு­க­ளில் வழக்­கு­க­ளைத் தாக்­கல் செய்­யு­மாறு பொலி­ஸா­ருக்கு கட்­ட­ளை­யிட்­டது. வழக்கு ஜூன் மாதம் 28ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­ பட்­டுள்­ளது. முறைப்­பாட்­டா­ளர்­கள் சார்­பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான, அரச தலை­வர் சட்­டத்­த­ரணி திரு­மதி சாந்தா அபி­மன்­ன­சிங்­கம், 

கணே­ச­ராஜா, இரா­ஜ­கு­லேந்­திரா, இளங்­கு­ம­ரன், செல்வி புரா­தணி சிவ­ லிங்­கம், திரு­மதி விதுர் சுபா, தர்­ம­ராஜ் வினோ­தன், ராகுல் சிறி­ரங்­க­நா­ தன், கதி­ர­மலை ஜெய­காந்­தன், இர­வீந்­தி­ர­நா­தன் கீர்த்­தனா, செல்­வரா டினே­சன், நட­ன­ச­பா­பதி அனிஸ் ஆகி­யோ­ரும், 

எதி­ரா­ளி­கள் சார்­பில் அன்­ரன் புனி­த­நா­ய­கம், வடக்கு மாகாண சபை முன்­னாள் உறுப்­பி­னர்­க­ளான பிறி­முஸ் சிராய்வா, பா.டெனீஸ்­வ­ரன் மற்­ றும் யோன்­தாஸ் துஷாத், ஜெப­நே­சன் லோகு, அர்­ஜின் போன்­றோ­ரும் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­த­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு