கிளிநொச்சி மாவட்டத்தின் பெறுமதிமிக்க இயற்கை வளத்தை தாரைவாா்க்க முயற்சி..!சளாப்புகிறாா் மாவட்டச் செயலா்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்டத்தின் பெறுமதிமிக்க இயற்கை வளத்தை தாரைவாா்க்க முயற்சி..!சளாப்புகிறாா் மாவட்டச் செயலா்..

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உப்பளங்களை தனியாருக்கு தாரைவாா் க்க சிலா் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், மேற்படி விடயம் கு றித்து ஒருங்கிணைப்பு குழுவின் தீா்மானத்திற்கமைய முடிவுகள் எட்டப் படும் என மாவட்ட செயலா் சு.அருமைநாயகம் கூறியுள்ளாா். 

தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றுக்கு உப்­ப­ளம் அமைப் ­ப­தற்­காக கிளி­நொச்சி பகு­தி­யில் நூறு ஏக்­கர் நிலத்தை வழங்­கு­ வ­தற்கு நட­வ­டிக்­கை­கள் இர­க­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­ றும், இது தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் ஒன்று 

கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்­தில் இடம்­பெற்­றது என்­றும், இணை­யத்­ த­ளங்­க­ளில் நேற்று செய்­தி­கள் பர­வின. வன­வளத் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மில்­லாத பிர­தே­சத்தை வன­வ­ளத் திணைக்­க­ளம் தங்­க­ளு­டை­யது என பிர­க­ட­னம் செய்­து­விட்டு அதனை வழங்­கு­வ­தற்­கான 

முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்­றும் தக­வல் வெளி­யா­கி­யி­ருந்­ தன. கிளி­நொச்சி மாவட்­டத்­தில் பல இடங்­க­ளில் மக்­கள் நீண்ட கால­ மாக வசித்து வரு­கின்ற காணி­கள், கிரா­மங்­க­ளில் உள்ள விளை­யாட்டு மைதா னங்­கள், குளங்­கள் ஜெய­பு­ரம் பிர­சேத்­தில் 

மக்­க­ளின் வயற்­கா­ ணி­கள் என்­ப­வற்றை வன­வ­ளத் திணைக்­க­ளம் தங்­ க­ளு­டை­யது என்­றும் அதனை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது என்­றும் உறு­ தி­யான நிலைப்­பாட்­டில் இருக்­கும் போது இந்த விட­யத்­தில் இவ்­வாறு நடந்­து­கொள்­வது மக்­கள் மத்­தி­யில் பெரும் அதிர்ச்­சியை 

ஏற்­ப­டுத்­தி­யுள்­ ளது என்­றும் இணை­யத்­த­ளங்­கள் செய்­தி­வெ­ளி­யிட்­டி­ருந்­ தன. அந்­தத் தக­வலை கிளி­நொச்சி மாவட்­டச் செய­லர் மறுத்­தார். அது தொடர்­பில் அவர் தெரி­வித்­த­தா­வது, கிளி­நொச்­சியில் உப்­ப­ளம் அமைக் க சில நிறு­வ­னங்­கள் அனு­ம­தி­க­ளைக் கோரி­யுள்­ளன. 

கிளி­நொச்­சிக்கு வரும் முத­லீ­டு­களை நாங்­கள் வர­வேற்­க­வேண்­டும். கொழும்பு, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­க­ளில் ஏரா­ள­மான நிறு­வ­னங்­ கள் முத­லீ­டு­களை மேற்­கொண்டு உற்­பத்­தி­யைப் பெருக்கி அந்த மாவட்­ டத்தை அபி­வி­ருத்­தி­நோக்கி தள்­ளு­கின்­றன.

ஆனால் யாரும் கிளி­நொச்­சிக்கு வரு­கின்­றார்­கள் இல்லை. வரு­ப­வர்­க­ ளை­யும் விடு­கி­றார்­கள் இல்லை. உப்­ப­ளம் அமை­ப் ­ப­தற்கு கேட்­கப்­பட்ட  இடம் காட்­டுப் பிர­தே­சம், அது வன­வ­ளத் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­ மா­னது. அவர்­களை அழைத்து அது­தொ­டர்­பி­லேயே 

நேற்று கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. ஒரு நிறு­வ­னத்­துக்கு காணி வழங்­க­ வேண்­டு­மா­னால் அதற்­கென ஒரு நடை­முறை உள்­ளது. மாவட்­டச் செய­ ல­கத்­தில் உள்ள தொழில் நுட்­பக் குழு­வில் அந்த விடை­யத்­தைப் பற்றி ஆராய வேண்­டும், 

அடுத்து தேசிய ரீதி­யில் உள்ள தொழில் நுட்­பக் குழு­ வில் ஆராய வேண்­ டும், அடுத்த படி­யாக மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழு­வுக்கு அதை பாரப் ­ ப­டுத்­த­வேண்­டும். இவ்­வாறு நடை­மு­றை­கள் இருக்­கும்­போது காணியை கொடுப்­ப­தற்கு இர­க­சி­ய­மாக கலந்­து­ரை­யா­டல் என்­ப­தும், 

இர­க­சிய நட­வ­டிக்கை என்­ப­தும் வேடிக்­கை­யா­னது. மாவட்­டச் செய­லர்­ கள் கலந்­து­ரை­யா­டல் ஒன்று இடம்­பெ­ற­வுள்­ளது எனவே அதில் இந்த விடை­யங்­க ­ளைத் தெளிவு படுத்­து­வ­தற்­கா­கவே அந்­தக் கலந்­து­ரை­யா­ டல் இடம்­பெற்­றது என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு