கேள்விகளுக்கு பதிலளிக்க சபையில் அமைச்சா்கள் இல்லை. கடுப்பான கூட்டமைப்பு..

ஆசிரியர் - Editor I
கேள்விகளுக்கு பதிலளிக்க சபையில் அமைச்சா்கள் இல்லை. கடுப்பான கூட்டமைப்பு..

அமைச்சுக்கள் சம்மந்தமான விவாதத்தின்போது கூட்டமைப்பினா் எழுப்பிய கேள்விகளுக் கு பதிலளிக்க அமைச்சா்கள் இல்லாமையினால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னா்கள் சபையில் கடும் அதிருப்தி வெளியிட்டிருக்கின்றனா். 

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளு மன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் 

இவ்வாறு அதிருப்தி வெளியிட்டார். கிளிநொச்சியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் புரனமைப்பு செய்யப்படாமை குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கருத்து வெளியிட்டார்.

எனினும் இதற்கு விளக்கமளிப்பதற்கான அமைச்சர் சபையிலிருந்து இடைநடுவே சென்றிருந்தமை குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டிருந்தார். அமைச்சுகள் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் பிரசன்னம் 

அவசியமானது எனவும் சிறிதரன் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு