யாழ்.மறைமாவட்ட ஆயரை சந்தித்தாா் ஆளுநா் சுரேன் ராகவன், மதங்களுக்கிடையிலான குழப்பங்கள் குறித்தும் ஆராய்வு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மறைமாவட்ட ஆயரை சந்தித்தாா் ஆளுநா் சுரேன் ராகவன், மதங்களுக்கிடையிலான குழப்பங்கள் குறித்தும் ஆராய்வு..

கத்தோலிக்க மக்களுக்கும் இந்து சமயத்தவா்களுக்குமிடையில் உருவா கியிருக்கும் குழப்பங்களை தீா்த்துக் கொள்ளும் வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் யாழ்.மறைமாவ ட்ட ஆயா் ஜஸ்டின் ஞானபிரகாசத்தை நோில் சந்தித்துள்ளாா். 

மேலும், வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்களில் பாதுகாப்பு படையி னரின் கட்டுப்பாட்டிலுள்ள கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட எஞ்சியுள்ள மக்களின் விடுவிக்கப் படாத காணிகளை   விடுவிக்கும் நடவடிக்கைளை 

மேற்கொள்ளுமாறு யாழ் மறைமாவட்ட ஆயா் ஆளுநாிடம் கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பின் போது வடமாகாண பௌத்த மாநாட்டிற்கு தன்னுடைய ஆசியை வழங்கியதுடன் ஆளுநர் தமது பணிகளை திறம்பட மேற்கொண்டு செல்வதாக  யாழ்.மறைமாவட்ட ஆயர் ஆளுநருக்கு ஆசி வழங்கினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு