நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்கான நானே நீதிமன்றம் சென்று தண்டணை பெற்றுக் கொடுப்பேன், ஆளுநா் ஆவேசம்..

ஆசிரியர் - Editor I
நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்கான நானே நீதிமன்றம் சென்று தண்டணை பெற்றுக் கொடுப்பேன், ஆளுநா் ஆவேசம்..

நீதிமன்றம் வழங்கிய உத்தரவினை மீறிய குற்றத்திற்காக நானே நீதிம ன்றம் சென்று தண்டணை பெற்றுக் கொடுப்பேன். என வடமாகாண ஆ ளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளதுடன், பொறுப்புவாய்ந்த அதிகாாிகள் மீதும் நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறியுள்ளாா். 

நேற்றய தினம் கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பு ஒன்றிணை நடாத்திய வடமாகாண ஆளுநருக்கும் அதிகாாிகளுக்கும் கிளிநொச்சியில் உள்ள பாரதி உணவகம் என்ற உணவகத்திலிருந்து உணவு கொள்வனவு செய் யப்பட்டிருக்கின்றது. 

அந்த உணவுக்குள் புழுக்கள் கிடந்தமையினையடுத்து குறித்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றினால் உடனடியாக உணவகத்தை மூடுமாறு பணிக்கப்பட்டிருக்கின்றது. ஆனா லும் உணவகம் மூடப்படவில்லை. 

இந்நிலையில் நேற்று மாலை 8 மணியளவில் அந்த பகுதி ஊடாக பயணி த்த ஆளுநா் சுரேன் ராகவன் நீதிமன்ற உத்தரவினையும் மீறி உணவகம் திறந்துள்ளமையினை நோில் அவதானித்துள்ளாா். இதனையடுத்து ஆ ளுநா் உணவகத்திற்குள் புகுந்து சோதனை நடத்தியுள்ளாா். 

இதனையடுத்து அங்கு ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த ஆளுநா் சுரே ன் ராகவன் மாலை 4 மணிக்கு உணவகத்தை மூடுமாறு நீதிமன்றம் உத் தரவு பிறப்பித்துள்ளது. ஆனாலும் இரவு 8 மணிவரையில் உணவகம் பூட் டப்படவில்லை. 

அதனை நான் நோில் பாா்த்துள்ளேன். இந்நிலையில் நானே நீதிமன்றத் திற்கு சென்று நீதிமன்றத்தின் உத்தரவை மீறியமைக்காக குறித்த உண வகத்தின் மீது சட்டநடவடிக்கை எடுப்பேன். மேலும் பொறுப்புவாய்ந்த அதிகாாிகள் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு