இரும்பு வியபாாி வேஷத்தில் திாிந்த போதைப் பொருள் வியாபாாி, தற்செயலாக சிக்கினாா்..

ஆசிரியர் - Editor I
இரும்பு வியபாாி வேஷத்தில் திாிந்த போதைப் பொருள் வியாபாாி, தற்செயலாக சிக்கினாா்..

வவுனியா- ஓமந்தை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இரும்பு வியாபாாியை பொலிஸாா் கைது செய்திருக்கின்றனா். 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்த பொலிஸார்,

இன்று மாலை ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் கடமை யில் இருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த 

இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் நபர் ஒருவரை வழிமறித்து சோதனை செய்துள்ள னர். இதன்போது அவரிடமிருந்து 

45 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டதாக தெரிவித்தனர். இதனை யடுத்து, 55 வயதான குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் 

அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் தமது கட்டுப்பாட்டில் எடுத்து சென்றுள்ள தாக தெரிவித்த பொலிஸார் கைது செய்யபட்ட நபர் 

நாளைய தினம் நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு