யாழ். பயணத்தின் போது கைத்தொலைபேசியை பறிகொடுத்தார் பிரதமரின் செயலாளர்!

ஆசிரியர் - Admin
யாழ். பயணத்தின் போது கைத்தொலைபேசியை பறிகொடுத்தார் பிரதமரின் செயலாளர்!

யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரின் கைத்தொலைபேசி திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து சத்திர சிகிச்சை பிரிவு நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விலேயே பிரதமரின் செயலாளரின் 55,000 ரூபா பெறுமதியான தெலைபேசி திருடப்பட்டுள்ளது.

இச் திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் செய்து கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததுடன் திருடப்பட்ட தெலைபேசியிலிருந்த சிம்மின் மூலம் தெலைபேசி இருக்குமிடத்தினை அறிந்து கௌ்ள முடியும் என்பதால், 

அது தொடர்பான தகவல்களை வலையமைப்பு நிறுவனத்தை வழங்கும்படி உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிவானிடம் கோரிக்கை முன்வைத்தனர். இதனையடுத்து நீதிமன்றம் அதற்கான கட்டளை வழங்கியது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு