யாழ்ப்பாணத்திலிருந்து கஞ்சா கடத்திய இராணுவ சிப்பாய் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து கஞ்சா கடத்திய இராணுவ சிப்பாய் கைது..

வவுனியா- நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் கேரள கஞ்சாவுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரிடம் வசமாக மாட்டியுள்ளார். 

இது குறித்த மேலும் தெரியவருவதாவது, 

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை 01.30 மணியளவில் குறித்த இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் சோதனையிட்டபோதே 

குறித்த இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது  200 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்இ கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு