'ஈபிஆர்எல்எவ் ஆவணத்தை நான் வெளியிடவில்லை!' - மறுக்கிறார் விக்கி.

ஆசிரியர் - Admin
'ஈபிஆர்எல்எவ் ஆவணத்தை நான் வெளியிடவில்லை!' - மறுக்கிறார் விக்கி.

யாழ்ப்பாணத்தில் நடந்த ஈ.பி. ஆர்.எல் எவ் மாநாட்டில் தான் எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஈ. பி. ஆர். எல் எவ் மாநாட்டில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டு ஆவணம் ஒன்றை வெளியிட்டு வைத்ததாகவும் அந்த ஆவணத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்தச் செய்தி தொடர்பில் மறுப்புத் தெரிவித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“யாழ்ப்பாணத்தில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற ஈ. பி. ஆர். எல்.எவ் மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியதைத் தவிர, புத்தக வெளியீட்டிலோ அல்லது வேறு எந்த ஆவண வெளியீட்டிலோ நான் ஈடுபடவில்லை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு