யாழ். சிறுப்பிட்டியில் மரத்தில் இருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி பகுதியில், இன்று மரத்தில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர், எஸ். சேந்தில்குமரன் (வயது 44) என, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
வேலிகட்டுவதற்காக, வீட்டில் இருந்த மரக் கிளையை வெட்டும் போதே, குறித்த நபர், மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.