போதை பொருளுக்கு எதிராக வீதியில் இறங்கிய சிறுவா்கள், பெண்கள்..

ஆசிரியர் - Editor I
போதை பொருளுக்கு எதிராக வீதியில் இறங்கிய சிறுவா்கள், பெண்கள்..

போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று நடாத்தப்பட்டது.

யாழ்.நகரை அண்மித்துள்ள ஜே 86 சோனகதெரு தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்கள் தமது பகுதியில் இன்று மாலை இந்த போராட்டத்தை முன்னெடுத்துருந்தனர்.

இதன் போது போதை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பதால் போதையை முற்றாக இல்லாதவர்கள் வேண்டுமென வலியுறுத்தியுருந்தனர்.

அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு