“உத்தரதேவி” ரயில் சேவை தொடா்பில் விமா்சனங்களை முன்வைக்கும் பொதுமக்கள், அசிங்கங்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு..!

ஆசிரியர் - Editor I
“உத்தரதேவி” ரயில் சேவை தொடா்பில் விமா்சனங்களை முன்வைக்கும் பொதுமக்கள், அசிங்கங்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு..!

யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் அண்மையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட உத்தரதேவி ரயில்  சேவை குறித்து பொதுமக்கள் பல்வேறு விமா்சனங்களை முன்வைத்துள்ள நிலையில் ர யில் திணைக்களம் உாிய பதிலை வழங்காமல் உள்ளது. 

இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த ரயில் அண்மையில் யாழ்ப்பாணம்- கொ ழும்பு இடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. சேவை ஆரம்பித்து சில நாட்களே ஆகும் நிலை யில் பயணிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனா். 

இந்த விடயத்தால் அசௌகரியத்திற்கு உள்ளான யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பயணி ஒருவர் தெரிவிக்கையில், எதிர்பார்ப்புடன் இந்த புதிய தொடருந்தில் ஏறிய போதும் எதிர்பார் த்ததை விட மிக மோசமான ஒரு பயணத்தை உணர்ந்தேன்.

நாம் பதிவு செய்த மூன்றாம் வகுப்பு பெட்டியில் சாதாரண டிக்கெட்டில் பயணிப்போரும் ஏறி மிகவும் நெருக்கியபடி பயணித்துள்ளனர். அதில் சில இளைஞர்கள் பெண்கள் மீது அங்க சே ட்டைகளில் ஈடுபட்டதனையும் அவதானித்தேன். 

பதிவு செய்த ஆசனத்தில் கூட நிம்மதியான பயணம் இல்லை. ஏறும்போதும் தள்ளி விழுத்தி யபடி ஏறுகிறார்கள். முற்பதிவுக்கென ஒதுக்கிய ஆசனத்தில் ஏன் தேவைக்கதிகமானோரை ஏற்றுகிறீர்கள் என அதிகாரிகளிடம் கேட்டதற்கும் உரிய பதில் இல்லை.

மிகவும் வெறுப்பான ஒரு பயணம். பேசாமல் பேருந்தில் வந்திருக்கலாமோ என்று தோன்றியது என தெரிவித்துள்ளார். இதேவேளை தொடருந்தில் பயணிக்கும் சிலர் வெற்றிலை சாப்பிட்டு தொடருந்திலேயே துப்பிவிடுவதாகவும் சமூக வலைத்தளங்களில் 

படம் ஒன்று வெளியிட்டு விசனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு