மக்கள் நடமாட்டம் அதிகமான யாழ்.நகருக்குள் பிரபல தேனீா்ச்சாலையை உடைத்து திருட்டு..
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள தம்பி தேனீர்ச்ணாலையினை நேற்று இரவு உடைத்து உட்புகுந்த திருடர்கள் சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை களவாடி தப்பிச் சென்றுள்ளனர்.
ஸ்ரான்லி வீதியில் உள்ள குறித்த தேநீர்ச்சாலையின் கூரைப் பகுதியினை பிரித்து உள்நுழை ந்துள்ள திருடர்கள் கடையில் இருந்த சிகரெட் வகைகள் மற்றும் கிற்காட்கள் ,
பிஸ்கட் வகைகள் , கேல்பானங்கள் ஆகியனவே களவாடியுள்ளதோடு கடையின் விற்பனை சுழற்சிக்காக வைத்திருந்த சுமார் 5 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றுடன்
கண்ணன் சிலை , மற்றும் குபேரசிலை தட்டில் சேகரித்து வைத்திருந்த ஒரு தொகைப் பணம் என்பவற்றையும் களவாடிச் சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 11.30ற்கு கடையினை மூடிவிட்டு வீடு சென்ற உரிமையாளர் நேற்றுக் காலையில் கடையை திறந்தபோதே களவாடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.