“ஒப்பரேசன் கஞ்சா” நடவடிக்கை இன்று ஆரம்பம்..
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் தொடா்ச்சியாக அதிகளவான கஞ்சா மீட்கப்பட்டுவரும் நி லையில் அவற்றை பூரணமாக கட்டுப்படுத்தும் நோக்கில் “ஒப்பரேசன் கஞ்சா” என்ற பெயாில் பொலிஸாா் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனா்.
இதற்காக வடக்கு மாகாணத்தின் வேறு மாவட்டங்களிலிருந்து 100 பொலிஸார் களமிறக்கப்படவுள்ளனா். யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 200 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு இடங்களிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாருக்கு இரகிசயத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் ‘ஒப்பரேசன் கஞ்சா’ நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
காங்கேசன்துறைப் பிராந்தியத்துக்கு உள்பட்ட வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, அச்சுவேலி, இளவாலை ஆகிய 4 பொலிஸ் பிரிவுக்கும் உட்பட்ட பகுதிகளில் பொலிஸார் களமிறக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.