யாழ்.நாவாந்துறை இளம்பெண் கடத்தல் விவகாரம், வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியவா் வசமாக மாட்டினாா்..
யாழ்.நாவாந்துறையில் இளம் பெண்ணை கடத்த முயற்சித்தபோது பொதுமக்களால் மடக்கி பி டிக்கப்பட்டு நையப்பு டைக்கப்பட்ட நபா் பின்னா் வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்றதாக கூறப்பட்ட நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளாா்.
குறித்த சம்பவம் தொடா்பில் மேலும் தொியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னா் நா வாந்துறை பகுதியில் இளம் பெண் ஒருவரை கடத்த முயற்சித்தபோது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நபா் ஒருவரை பொலிஸாா் காப்பாற்றியிருந்தனா்.
பின்னா் அந்த நபா் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந் த நிலையில் வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்றுவிட்டதாக பொலிஸாா் கூறியிருந்தனா். இ ந்நிலையில் இன்று காலை பொலிஸ் வட்டாரங்கள் வழங்கிய தகவலின்படி,
யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்ற நபா் தெல்லிப்பளை வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அடையாளம் காணப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு தற்போது 24ம் விடுதியில்
பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை வழங்கப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது.