ரொட்டியில் மயக்க மருந்து: அனைத்தையும் சுருட்டிச் சென்ற மகா திருடன்?

ஆசிரியர் - Editor II
ரொட்டியில் மயக்க மருந்து: அனைத்தையும் சுருட்டிச் சென்ற மகா திருடன்?

பராட்டா எனப்படும் ரொட்டியை உண்ட ஒரு குடும்பம் சுய நினைவை இழந்ததனால் பெரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் இலங்கையின் மத்திய மாகாணம் கண்டியில் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, கண்டி தெல்தோட்டை எனும் பகுதியினைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் வீட்டில் நபர் ஒருவர் வாடகைக்கு இருந்துள்ளார். இந்த நிலையில் குறித்த நபரால் அங்கிருந்தோருக்கு பராட்டா மற்றும் தின் பண்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றினைப் பெற்றுச் சாப்பிட்டவர்கள் மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில் குறித்த நபர் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி அவர்களின் வீட்டில் இருந்த பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சுருட்டிச் சென்றுள்ளார். தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள் என்பனவே குறித்த நபரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மயக்கமடைந்தவர்கள் குறித்து பரிசோதனை செய்துகொண்ட வைத்தியர்கள் ஆபத்தான நிலையில் அவர்களது உடல் நிலை காணப்படவில்லை என்று கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு