அண்ணன்-தம்பி மோதல், அண்ணன் உயிாிழப்பு தம்பி கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
அண்ணன்-தம்பி மோதல், அண்ணன் உயிாிழப்பு தம்பி கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில்..

காசு பிணக்கு காரணமாக அண்ணன் , தம்பி மோதிக்கொண்டதில் அண்ணன் உயிரிழந்த நி லையில் , தம்பி கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்.பருத்தித்துறை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்று ள்ளது.  குறித்த சம்பவத்தில் நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் 

தந்தையான சிறிரங்கநாதன் சுதாகரன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த சம் பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 

குறித்த சகோதரர்கள் இடையில் காசு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீண்டகாலமாக பி ணக்கு நிலவி வந்துள்ளது. 

அந்நிலையில் நேற்றைய தினம் இரவு அண்ணன் தம்பிக்கு இடையில் காசு பிணக்கு வாய்த் தர்க்கமாக மாறியுள்ளது. 

வாய் தர்க்கம் கைக்கலப்பாக மாறிய போது தம்பி மீது அண்ணன் கத்தியால் குத்திய நிலையில் அண்ணன் மீது தம்பி கொட்டனால் தாக்கியுள்ளார். 

கொட்டன் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான தம்பி மந்திகை 

வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு