12 கிலோ கஞ்சாவுடன் பொன்னாலையில் இளைஞா் கைது..
யாழ்.பொன்னாலை பகுதியில் 12 கிலோ கஞ்சா போதை பொருளை மீட்டுள்ளதாகவும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிசார் தெரிவித்தனர்.
தமக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கஞ்சாவை மீட்டதாகவும் , அதனை விற்பனை செய்யும் நோக்குடன்
வைத்திருந்த மாதகலை சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ததாகவும் , கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர்
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.